ADDED : ஜூன் 24, 2026 01:26 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: உழவர்கரை கனகன் ஏரி சத்தியசாய் நகரில் உள்ள முக்கூடல் ராஜகணபதி கோவில் கும்பாபிேஷகம் நாளை 25ம் தேதி நடக்கிறது.
அதனையொட்டி, இன்று காலை 9 மணிக்கு கணபதி ேஹாமத்துடன் கும்பாபிேஷக பூஜை துவங்குகிறது.
தொடர்ந்து, நவகிரஹ ேஹாமம், மகாலட்சுமி ேஹாமம், மாலை 5 மணிக்கு வாஸ்து சாந்தி, பிரவேசபலி, அங்குரார்ப்பணம், ரக் ஷாபந்தனம், கடஸ்தாபனம், முதல்கால யாக பூஜை நடக்கிறது.
நாளை 25ம் தேதி காலை 5:30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, கோ பூஜை, நாடி சந்தானம், தத்வார்ச்சனை, பூர்ணாஹூதி நடக்கிறது.
காலை 8:30 மணிக்கு கடம் புறப்பாடு, 9 மணிக்கு மகா கும்பாபிேஷம் நடக்கிறது. ஏற்பாடுகளை, திருப்பணிக்குழுவினர், ஊர் பொது மக்கள் செய்து வருகின்றனர்.
