/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாரதாம்பாள் கோவிலில் நவராத்திரி விழா துவக்கம்
/
சாரதாம்பாள் கோவிலில் நவராத்திரி விழா துவக்கம்
ADDED : மார் 20, 2026 07:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி சிருங்கேரி சிவகங்கா மடம் சாரதாம்பாள் கோவிலில், 20ம் ஆண்டு நவராத்திரி விழா, நேற்று துவங்கியது.
புதுச்சேரி, எல்லைப்பிள்ளைச்சாவடி சிருங்கேரி சிவகங்கா மடம், சாரதாம்பாள் கோவிலில், நேற்று காலை வசந்த நவராத்திரி விழா துவங்கியது. அதனை தொடர்ந்து, ராம நவமி தினமான வரும் 27ம் தேதி,நவராத்திரி விழா பூர்த்தி மற்றும் சஹஸ்கரநாம பூஜை நடக்கிறது.
தொடர்ந்து, சாரதாம்பாள் உற்சவர் சுவாமி உள்புறப்பாடு மற்றும் சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடக்கிறது.
பின்னர் ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

