UPDATED : செப் 15, 2026 06:26 PM
ADDED : செப் 15, 2026 06:21 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: கார் வாஷிங் சர்வீஸ் ஸ்டேஷனில் பணம் மற்றும் மொபைலை திருடி சென்ற தொழிலாளியை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி குயவர்பாளைம் வேல்முருகன் நகரை சேர்ந்தவர் கிருபாசங்கர், 32. இவர், இ.சி.ஆரில், கார் வாஷிங் சர்வீஸ் ஸ்டேஷன் நடத்தி வருகிறார். இங்கு, மதுரையை சேர்ந்த இளையபாரதி என்பவர் வேலை செய்து வந்தார். இந்நிலையில் கடையில் வைத்திருந்த 1.15 லட்சம் ரூபாய் மற்றும் மொபைல் போன் காணாமல் போயிருந்தது.
அங்கு வேலை செய்த இளையபாரதியும் மாயமானார். இதுகுறித்து, கிருபாசங்கர் புகாரின் பேரில், டி.நகர். போலீசார் வழக்கு பதிந்து, இளையபாரதியை தேடி வருகின்றனர்.
