/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'என்.ஆர்.காங்., தேர்தல் அறிக்கை மக்கள் நலன் சார்ந்து இருக்கும்'
/
'என்.ஆர்.காங்., தேர்தல் அறிக்கை மக்கள் நலன் சார்ந்து இருக்கும்'
'என்.ஆர்.காங்., தேர்தல் அறிக்கை மக்கள் நலன் சார்ந்து இருக்கும்'
'என்.ஆர்.காங்., தேர்தல் அறிக்கை மக்கள் நலன் சார்ந்து இருக்கும்'
ADDED : பிப் 08, 2026 04:09 AM
புதுச்சேரி: என்.ஆர்., காங்., 16ம் ஆண்டு விழாவில், கலந்து கொண்ட முதல்வர் ரங்கசாமி, தேர்தல் அறிக்கை மக்கள் நலன் வளர்ச்சிக்காக இருக்கும் என தெரிவித்தார்.
என்.ஆர்.காங்., 16ம் ஆண்டு துவக்க விழாவில் பங்கேற்ற முதல்வர் ரங்கசாமி நிருபர்களிடம் கூறியதாவது;
எங்கள் அரசு சொன்னதை செய்கின்ற அரசு, அதை செய்து கொண்டிருக்கிறோம். என்.ஆர்.காங்., கட்சியின் தேர்தல் அறிக்கை மாநில மக்கள் நலன் மற்றும் வளர்ச்சிக்காக இருக்கும். இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பை உருவாக்குகின்ற ஆட்சியாக இருக்கும்.
தேர்தல் தேதி அறிவித்தவுடன், தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி தொடங்கப்படும். புதுச்சேரிக்கு பிரதமர் மோடி வரும் போது, வளர்ச்சி திட்டங்களை அறிவிப்பார்.
தே.ஜ., கூட்டணியில் என்.ஆர்.காங்., நீடிக்குமா என்றதற்கு, புதுச்சேரியில், பா.ஜ., - என்.ஆர்., கூட்டணி ஆட்சி தான் நடந்து வருகிறது' என்றார்.

