sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 ஆம்னி பஸ் எரிந்து விபத்து: 3 பேர் மீது வழக்கு பதிவு

/

 ஆம்னி பஸ் எரிந்து விபத்து: 3 பேர் மீது வழக்கு பதிவு

 ஆம்னி பஸ் எரிந்து விபத்து: 3 பேர் மீது வழக்கு பதிவு

 ஆம்னி பஸ் எரிந்து விபத்து: 3 பேர் மீது வழக்கு பதிவு


ADDED : ஜன 15, 2026 07:51 AM

Google News

ADDED : ஜன 15, 2026 07:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரி கொம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர்; ஆம்னி பஸ் டிராவல்ஸ் நடத்தி வருகிறார். இவருக்கு சொந்தமான ஆம்னி பஸ் 13 பயணிகளுடன், புதுச்சேரியில் இருந்து பொள்ளாச்சிக்கு, கடந்த 12ம் தேதி இரவு புறப்பட்டது. பஸ்சை, டிரைவர் செந்திகுமார் ஓட்டிச் சென்றார்.

நுாறடி சாலை ரயில்வே மேம்பாலத்தில் சென்றபோது, பஸ் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்த, தீயணைப்பு வீரர்கள், விரைந்து வந்து, தீயை அணைத்தனர்.இதுகுறித்து, முதலியார்பேட்டை போலீசார் விசாரணை நடத்தினர். அதில், ஆவணங்கள் மற்றும் புதுச்சேரியில் இயக்குவதற்கான உரிமம் இல்லாமல் இருந்தது தெரியவந்தது.

மேலும், பஸ், சரியான முறையில் பராமரிப்பு இல்லாமல் இருந்ததால், சார்ட் சர்கீயூட் ஆகி தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக, பஸ் உரிமையாளர் சந்திரசேகர், டிரைவர் செந்தில்குமார், கண்டக்டர் கணேஷ் ஆகியோர் மீது, 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us