sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

உள்ளாட்சி துறை பணிகளை விரைவுபடுத்த முதல்வருக்கு ஓம்சக்திசேகர் கோரிக்கை

/

உள்ளாட்சி துறை பணிகளை விரைவுபடுத்த முதல்வருக்கு ஓம்சக்திசேகர் கோரிக்கை

உள்ளாட்சி துறை பணிகளை விரைவுபடுத்த முதல்வருக்கு ஓம்சக்திசேகர் கோரிக்கை

உள்ளாட்சி துறை பணிகளை விரைவுபடுத்த முதல்வருக்கு ஓம்சக்திசேகர் கோரிக்கை


ADDED : நவ 05, 2024 06:48 AM

Google News

ADDED : நவ 05, 2024 06:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: உள்ளாட்சி துறை பணிகளை விரைவு படுத்த வேண்டும் என முதல்வருக்கு அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு குழு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

மாநில உட்கட்டமைப்பு திட்டங்களை,உள்ளாட்சித் துறை மற்றும் பொதுப்பணி துறை மேற்கொள்ள வேண்டும். ஆனால் உள்ளாட்சித் துறையின் செயல்பாடுகள் சொல்லும்படியாக இல்லை .

புது பஸ்டாண்ட் ,நெல்லித்தோப்பு தொகுதி சக்தி நகர் பகுதியில் மூடப்பட்டிருக்கும் சமுதாயக்கூடத்தை திறக்க மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.குயவர்பாளையம் சமுதாய நலக்கூடம் பராமரிப்பின்றி உள்ளது.

புதுச்சேரி பிறப்பு இறப்பு பதிவாளர் அலுவலகத்தில் ஆட்கள் பற்றாக்குறை காரணமாக பணிகள் தேக்கமடைந்துள்ளது.நெல்லித்தோப்பு மார்க்கெட் மற்றும் சக்தி நகர் கழிப்பிடம் கட்டும் பணிகள் துவங்கப்படாமல் உள்ளது.எனவே, எதிர்வரும் மழை காலத்தை கருத்தில் கொண்டு உள்ளாட்சி நிர்வாகம் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த சம்பந்தப்பட்ட ஆணையர்களுக்கு கண்டிப்பான உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்.

உள்ளாட்சித் துறை பணிகளை விரைவு படுத்த முதல்வர் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us