sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

வரும் 21ம் தேதி ரேஷன் கடைகள் திறப்பு: அன்றே தீபாவளி அரிசி, சர்க்கரை: முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

/

வரும் 21ம் தேதி ரேஷன் கடைகள் திறப்பு: அன்றே தீபாவளி அரிசி, சர்க்கரை: முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

வரும் 21ம் தேதி ரேஷன் கடைகள் திறப்பு: அன்றே தீபாவளி அரிசி, சர்க்கரை: முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

வரும் 21ம் தேதி ரேஷன் கடைகள் திறப்பு: அன்றே தீபாவளி அரிசி, சர்க்கரை: முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு


ADDED : அக் 17, 2024 04:40 AM

Google News

ADDED : அக் 17, 2024 04:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: தீபாவளி பண்டிகைக்கான இலவச அரிசி மற்றும் சர்க்கரை வரும் 21ம் தேதி முதல் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் ரங்கசாமி நேற்று சட்டசபையில், நிருபர்களிடம் கூறியதாவது:

அரசு ஏற்கனவே அறிவித்தபடி தீபாவளி பண்டிகைக்கு முன்பாக அதாவது வரும் 21ம் தேதி அனைத்து ரேஷன் கடைகளும் திறந்து, அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் தலா 10 கிலோ அரிசி மற்றும் 2 கிலோ சர்க்கரை இலவசமாக வழங்கப்படும்.

அதனைத் தொடர்ந்து மாதந்தோறும் சிவப்பு ரேஷன் கார்டுதாரர்களுக்கு 20 கிலோ இலவச அரிசியும், மஞ்சள் ரேஷன் கார்டுதாரர்களுக்கு 10 கிலோ இலவச அரிசி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது. டெண்டர் முடிவு செய்ததும் இலவச அரிசி வழங்கப்படும். அதனைத் தொடர்ந்து பிற பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு மூன்று மாதம் சம்பளம் வழங்கப்படும். அதனைத் தொடர்ந்து மாதம் தோறும் சம்பளம் வழங்கப்படும்.

அதேபோன்று, சமூக நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் உதவித் தொகையை ரூ. ஆயிரம் உயர்த்தி வழங்கப்படும்.

இந்த உயர்த்திய உதவித் தொகை இந்த மாதம் முதல் முன்தேதியிட்டு அடுத்த மாதம் சேர்த்து வழங்கப்படும். மேலும், புதிதாக சேர்க்கப்பட்டுள்ள 175 பயனாளிகளுக்கும் உதவித் தொகை வழங்கப்படும்.

உயர்த்தப்பட்ட இந்த உதவித் தொகை மூலம் அரசுக்கு ஆண்டிற்கு ரூ. 24.5 கோடி கூடுதல் செலவாகும்.

காரைக்கால் பார்வதீஸ்வரர் கோவில் நில மோசடி குறித்து கேட்டதற்கு, ஏற்கனவே சட்டசபையில் அறிவித்தபடி அனைத்து கோவில்களின் சொத்து விபரம் குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த பட்டியல் விரைவில் வெளியிடப்படும். மிக கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து அரசு நிர்வாகம், மழை பாதிப்பை தவிர்க்க அனைத்து முனனேற்பாடுகளையும் மேற்கொண்டு தயார் நிலையில் உள்ளது. இரண்டு நாள் மழையில் எந்த பாதிப்பும் இல்லை.

நடிகர் விஜய் கட்சியான த,வெ.க., மாநாட்டிற்கு முதல்வரின் படத்தை பயன்படுத்துவது குறித்து கேள்விக்கு, பற்றும், விருப்பமும் உள்ளவர்கள் படத்தை போட்டுக் கொள்கின்றனர் என சிரித்தப்படி பதில் கூறினார்.






      Dinamalar
      Follow us