sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கொள்ளிடம் கீழணையில் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

/

கொள்ளிடம் கீழணையில் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

கொள்ளிடம் கீழணையில் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

கொள்ளிடம் கீழணையில் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு


ADDED : டிச 22, 2024 07:01 AM

Google News

ADDED : டிச 22, 2024 07:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காட்டுமன்னார்கோவில் : கொள்ளிடம் ஆற்றில் மழை வெள்ளப் பெருக்கு குறைந்ததால், டெல்டா பாசனத்திற்கு கீழணையில் இருந்து நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது.

டெல்டா பகுதியில் கடந்த ஒரு வாரம் மழை இல்லாததால், கீழணைக்கு தண்ணீர் வரத்து படிப்படியாக குறைந்து, கொள்ளிடம் ஆற்றில் திறந்துவிடப்பட்ட தண்ணீரும் குறைக்கப்பட்டது. நேற்று காலை வரை கொள்ளிடம் ஆற்றில் 5,000 கன அடி வீதம் திறந்துவிடப்பட்டது.

கீழணைக்கு நேற்று மாலை நிலவரப்படி 2,650 கன அடியாக நீர்வரத்து குறைந்ததால், கொள்ளிடம் ஆற்றில் திறந்துவிடப்படுவது முற்றிலும் நிறுத்தப்பட்டது. கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப் பெருக்கு குறைந்ததால், டெல்டா பாசனத்திற்கு நேற்று முன்தினம் மாலை முதல் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

கீழணை நீர் மட்டம் 8.4 அடியாக உள்ள நிலையில், டெல்டா பாசனத்திற்கு வடவாற்றில் 2,150 கன அடி, வடக்கு ராஜன்வாய்க்கால் 210 கன அடி, தெற்கு ராஜன் வாய்க்கால் 300 கன அடி வீதம் திறந்துவிடப்படுகிறது. வடவாறு மூலம் வீராணம் ஏரிக்கு 1,850 கன அடி தண்ணீர் வரத்து இருந்தது. ஏரி நீர் மட்டம் 46.03 அடி. வீராணம் ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்கு 74 கன அடி, பாசனத்திற்கு 45 கன அடி வீதம் திறந்துவிடப்படுகிறது.






      Dinamalar
      Follow us