/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆசிய சாதனை புத்தகத்தில் புதுச்சேரி மாணவர் நுால் எதிர்க்கட்சித் தலைவர் பாராட்டு
/
ஆசிய சாதனை புத்தகத்தில் புதுச்சேரி மாணவர் நுால் எதிர்க்கட்சித் தலைவர் பாராட்டு
ஆசிய சாதனை புத்தகத்தில் புதுச்சேரி மாணவர் நுால் எதிர்க்கட்சித் தலைவர் பாராட்டு
ஆசிய சாதனை புத்தகத்தில் புதுச்சேரி மாணவர் நுால் எதிர்க்கட்சித் தலைவர் பாராட்டு
ADDED : அக் 26, 2025 03:15 AM

புதுச்சேரி: இந்தியா மற்றும் ஆசிய சாதனை புத்தகத்தில் நுால் ஒன்றை அறிமுகம் செய்து அந்நுாலுக்கு 'மகா வித்தகர்' பட்டம் பெற்ற புதுச்சேரி மாணவரை எதிர்க்கட்சித் தலைவர் சிவா பாராட்டினார்.
வில்லியனுார் தொகுதி, ஜி.என்.பாளையம் வள்ளியம்மை நகர், சரவணன் மகன் திவ்யேஷ்; தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கிறார்.
அவர் ஆன்மிகம், மனித சிந்தனையின் பரிணாமம், மனித தத்துவம், சுதந்திர சிந்தனை, அரசியல் பார்வை, அமைதி, வாழ்வின் புதிய விழிப்புணர்வு போன்றவற்றை இன்றைய மாணவர் சமுதாயம் எளிதில் அறிந்து கொள்ளும் வகையிலும், இந்நுாலை வாசகர்கள் எளிதில் படித்து பயன்பெறக்கூடிய நிலையிலும் 'முடிசூடிய மனம்' எனும் ஆன்மிக நுாலை ஆங்கிலத்தில் தயாரித்திருந்தார்.
மனித ஆன்மாவின் உச்சக் குரலாக பார்க்கப்படும் இந்நுாலின் தன்மையை உலகறியச் செய்ய வேண்டும் என்ற நோக்கில் 'முடிசூடிய மனம்' எனும் நுாலை அந்த மாணவர் இந் தியா மற்றும் ஆசியா புத்தகத்தில் இடம் பெறச் செய்துள்ளார். அதனை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள், அந்நுாலை தயாரித்த மாணவர் திவ்யேஷ் என்பவரை இந்தியா மற்றும் ஆசியா புத்தக சாதனையில் அங்கீகரித்து ஆசிய அளவிலான 'மகா வித்தகர்' பட் டம் வழங்கி கவுரவித்தது.
இந்நுாலை அமேசான் நிறுவனம் மூலம் உலகறியச் சந்தைப்படுத்தப்பட்டு உள்ளது.
இளம் வயதில் 'மகா வித்தகர்' பட்டம் பெற்ற மாணவர் திவ்யேைஷ எதிர்க்கட்சித் தலைவர் சிவா நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
அப்போது, பி.ஆர்.டி.சி., போக்குவரத்துக் கழக தொ.மு.ச., செயலாளர் ராஜேந்திரன், மாணவரின் தந்தை சரவணன், நிர்வாகிகள் பாலகிருஷ்ணன், அய்யப்பன், வெங்கடாசலம் ஆகியோர் உடனிருந்தனர்.

