ADDED : செப் 14, 2026 08:32 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: உலக நன்மைவேண்டி திருக்காஞ்சி பெரியாழ்வார் திருத்தொண்டு சபை சார்பில் திருப்பதிக்கு பாதயாத்திரை பயணம் மேற்கொண்டுள்ளனர்.
திருக்காஞ்சி காமாட்சி மீனாட்சி சமேத கங்கை வராக நதீஸ்வரர், லட்சுமி வராகமூர்த்தி கோவிலில் துவங்கிய பாதயாத்திரை ஆண்டியர்பாளையம் வீர ஆச்சநேயர் கோவில் வழியாக திருப்பதிக்கு பாதயாத்திரை மேற்கொண்டனர். மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும் பாதயாத்திரை செல்கின்றனர். பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் புரட்டாசி 2வது சனிக்கிழமை திருப்பதியில் தரிசனம் செய்ய உள்ளனர்.
