sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பதவி உயர்வுக்கு போலி சான்றிதழ்: பாசிக் ஊழியருக்கு 6 நாள் சிறை

/

பதவி உயர்வுக்கு போலி சான்றிதழ்: பாசிக் ஊழியருக்கு 6 நாள் சிறை

பதவி உயர்வுக்கு போலி சான்றிதழ்: பாசிக் ஊழியருக்கு 6 நாள் சிறை

பதவி உயர்வுக்கு போலி சான்றிதழ்: பாசிக் ஊழியருக்கு 6 நாள் சிறை


ADDED : நவ 06, 2025 05:37 AM

Google News

ADDED : நவ 06, 2025 05:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: பதவி உயர்வுக்கு போலி சான்றிதழ் சமர்ப்பித்த பாசிக் ஊழியருக்கு 6 நாள் சிறை தண்டனை விதித்து புதுச்சேரி கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், பள்ளிச்சேரியை சேர்ந்தவர் குமாரவேல், 56. இவர், கடந்த 1995ம் ஆண்டு பாசிக் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். பின், விவசாய தொழில் நுட்ப தகுதி சான்றிதழ் சமர்ப்பித்ததை தொடர்ந்து கடந்த 1998ம் ஆண்டு மே 5ம் தேதி விற்பனையாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டது.

இந்நிலையில், அவர் வழங்கிய சான்றிதழ் மீது சந்தேகம் ஏற்படவே, ஆய்வு செய்ததில் போலி என தெரிய வந்தது.

இதுகுறித்து பாப்ஸ்கோ நிறுவனத்தின் முதன்மை இயக்குநர் நடராஜன் அளித்த புகாரின் பேரில் டி.நகர் போலசார் வழக்குப் பதிந்து குமாரவேலை கைது செய்தனர். இந்த வழக்கு புதுச்சேரி மாஜிஸ்திரேட் கோர்ட் 1ல் நடந்தது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் சேரலாதன், பதவி உயர்விற்காக போலி சான்றிதழ் சமர்ப்பித்த குமாரவேலுக்கு 6 நாள் சிறை தண்டனை மற்றும் ரூ.3,000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.






      Dinamalar
      Follow us