ADDED : அக் 06, 2025 01:39 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: வெங்கடேச பெருமாள் பக்தஜனசபா சார்பில், 33ம் ஆண்டு திருப்பதி, திருமலை பாதயாத்திரை புறப்படும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
புதுச்சேரி அடுத்த திருச்சிற்றம்பலம் கூட்ரோடு தனியார் திருமண மண்டபத்தில் இருந்து துவங்கிய திருப்பதி திருமலை பாதயாத்திரையில், வெங்கடேச பெருமாள் பக்தஜன சபா தலைவர் ஜெயச்சந்திரன் தலைமையில் கடந்த 17 ம் தேதி முதல்மாலை அணிந்து விரதம் இருந்த பக்தர்கள் 500க்கும் மேற்பட்டோர் புறப்பட்டனர்.
பாதயாத்திரையை பாஸ்கர் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். இதில், பூபதி, ஜெககாந்தன், மதுரகவி, ராமானுஜதாசன், கணபதி, சிவராமன், செந்தில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
