/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சித்தானந்த சுவாமி கோவிலில் பிரதோஷ சிறப்பு பூஜை
/
சித்தானந்த சுவாமி கோவிலில் பிரதோஷ சிறப்பு பூஜை
ADDED : ஜன 17, 2026 05:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: கருவடிக்குப்பம் குரு சித்தானந்த சுவாமி கோவிலில் நேற்று நடந்த பிரதோஷ பூஜையில் நந்தியம் பெருமான் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கருவடிக்குப்பம் குரு சித்தானந்த சுவாமி கோவிலில் நேற்று தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு சுவாமி மற்றும் நந்தியம் பகவானுக்கு மஞ்சள், விபூதி, சந்தனம், பன்னீர், இளநீர், பால், தயிர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட நறுமண பொருட்களை கொண்டு அபிேஷகம் நடைபெற்றது.
தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை நடந்தது. முன்னதாக மாட்டுப் பொங்கலையொட்டி, கோசாலையில் சிறப்பு பூஜை நடந்தது.

