sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 11, 2025 ,கார்த்திகை 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 தியாகி வீ. துளசிங்கம் பள்ளியில் 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கல்

/

 தியாகி வீ. துளசிங்கம் பள்ளியில் 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கல்

 தியாகி வீ. துளசிங்கம் பள்ளியில் 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கல்

 தியாகி வீ. துளசிங்கம் பள்ளியில் 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கல்


ADDED : டிச 09, 2025 05:55 AM

Google News

ADDED : டிச 09, 2025 05:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: அரியாங்குப்பம் தியாகி வீ.துளசிங்கம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்க ளுக்கு, 'தினமலர் -பட்டம்' இதழை, லயன்ஸ் கிளப் ஆப் பாண்டிச்சேரி சென்ட் ரல் தலைவர் வழங்கினார்.

மாணவ, மாணவியரின் வாசிப்பு திறனை மேம்படுத்தவும், பொது அறிவு செய்திகள், நாட்டு நடப்புகள், அறிவியல் கண்டுபிடிப்புகள், விஞ்ஞான வளர்ச்சி, தற்போதைய தொழில்நுட்ப அபிவிருத்திகள் உள்ளிட்ட அறிவியல்தகவல்களை மாணவர்களுக்கு எளிதில், புரியும் வகையில், தினமலர் மாணவர் பதிப்பு பட்டம், இதழ், திங்கள் முதல் வெள்ளி வரை வெளியிடப்பட்டு வருகிறது.

அரியாங்குப்பம், தியாகி வீ.துளசிங்கம் அரசு உயர்நிலைப் பள்ளியில், தினமலர் மாணவர் பதிப்பு பட்டம் இதழ் வழங்கும் விழா நடந்தது. நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, லயன்ஸ் கிளப் ஆப் பாண்டிச்சேரி சென்ட்ரல் தலைவர் பாஸ்கரன், இந்த கல்வியாண்டு முழுவதும் மாணவர்களுக்கு பட்டம் இதழை வழங்கினார்.

பள்ளி தலைமை ஆசிரியர் சத்தியவாணி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், சென்ட்ரல் அரிமா சங்க பொருளாளர் குப்தா, முன்னாள் தலைவர்கள் ரெமி ஜெரால்டு, கார்த்திகேயன், செபஸ்டீன் மார்டியல், மற்றும் பார்த்திபன், குருமூர்த்தி, வெங்கடபதி உட்பட பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக, பள்ளியில், பட்டம் நிகழ்ச்சியில், வெற்றிபெறும் முதல் மாணவருக்கும், ஊக்குவித்த ஆசிரியருக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வழங்குவதாக, லயன்ஸ் கிளப் ஆப் பாண்டிச்சேரி சென்ட்ரல் முன்னாள் செயலாளர் விவேகானந்தன், கல்பனா, ஆகியோர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us