/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி வளர்ச்சிக்கு உறுதுணை கவர்னரிடம் பிரதமர் மோடி உறுதி
/
புதுச்சேரி வளர்ச்சிக்கு உறுதுணை கவர்னரிடம் பிரதமர் மோடி உறுதி
புதுச்சேரி வளர்ச்சிக்கு உறுதுணை கவர்னரிடம் பிரதமர் மோடி உறுதி
புதுச்சேரி வளர்ச்சிக்கு உறுதுணை கவர்னரிடம் பிரதமர் மோடி உறுதி
ADDED : ஏப் 14, 2025 04:28 AM

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தின் வளர்ச்சிக்கு அனைத்து வகையிலும் மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என பிரதமர் மோடி உறுதியளித்தார்.
ஒரு நாள் அரசு முறை பயணமாக புது டில்லி சென்ற புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நாதன், பிரதமர் நரேந்திர மோடியை நேற்று நேரில் சந்தித்து பேசினார்.
சந்திப்பின்போது, புதுச்சேரிக்கான வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும், மத்திய அரசின் நிதி உதவி யோடு தற்போது நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளின் நிலை குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.
பிரதமரின் நலத்திட்டங்கள் தகுதியுடைய பயனாளிகளுக்கு சென்றடைய புதுச்சேரி அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும் கவர்னர் எடுத்துரைத்தார்.
விவரங்களை கேட்ட றிந்த பிரதமர் மோடி புதுச் சேரி மாநிலத்தின் வளர்ச்சிக்கு அனைத்து வகையிலும் மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என, உறுதி அளித்தார்.

