/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தனியார் நிறுவன மேலாளரிடம் ரூ.56 லட்சம் மோசடி
/
தனியார் நிறுவன மேலாளரிடம் ரூ.56 லட்சம் மோசடி
ADDED : டிச 09, 2025 05:59 AM
புதுச்சேரி: புதுச்சேரியை சேர்ந்தவர் பிரேம்நாத், 50; தனியார் நிறுவன மேலாளர். இவரை வாட்ஸ் ஆப் மூலம் தொடர்பு கொண்ட மர்மநபர், ஆன்லைனில் டிரேடிங் செய்தால், அதிக பணம் சம்பாதிக்கலாம் என கூறியுள்ளார்.
இதைநம்பிய, அவர் மர்ம நபர் தெரிவித்த ஆன்லைன் டிரேடிங்கில் பல்வேறு தவணைகளாகரூ.56 லட்சத்து 19 ஆயிரத்து 500 முதலீடு செய்துள்ளார். பின், அவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளை முடித்து, அதன்மூலம் வந்த லாபத்தை எடுக்க முயன்றபோது முடியவில்லை.
இதேபோல், கூடப்பாக்கத்தை சேர்ந்தவர் பகுதி நேர வேலையாக ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்து ரூ. 57 ஆயிரம் இழந்துள்ளனர்.
இதுகுறித்த புகார்களின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

