/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தில்லையாடி வள்ளியம்மை பள்ளியில் பரிசளிப்பு விழா
/
தில்லையாடி வள்ளியம்மை பள்ளியில் பரிசளிப்பு விழா
ADDED : பிப் 12, 2026 04:43 AM

புதுச்சேரி: கதிர்காமம் தில்லையாடி வள்ளியம்மை அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில், முதல்வர் ரங்கசாமி, மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.
கடந்த ஆண்டு, 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா, அறிவியல் கண்காட்சி மற்றும் விளையாட்டு போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா பள்ளியில் நடந்தது.
ஆசிரியர் ஜென்னி வரவேற்றார். தலைமை ஆசிரியர் வாசு தலைமை தாங்கினார்.
பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் அமரன் வாழ்த்துரை வழங்கினார். ஆசிரியர்கள் ஜோதிலட்சுமி, மகேஸ்வரி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்.
சிறப்பு விருந்தினராக முதல்வர் ரங்கசாமி, மாணவர்களுக்கு பரிசு வழங்கி, வாழ்த்தினார். நிகழ்ச்சியில் அமைச்சர் லட்சுமிநாராயணன், ரமேஷ் எம்.எல்.ஏ.,தலைமை ஆசிரியர் (2ம் நிலை) கணபதி, பாரதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆசிரியர் சுந்தரலட்சுமி நன்றி கூறினார்.

