sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ போராட்டம் நடத்தியவர்கள் விநாயகரை வைத்து பூஜை

போராட்டம் நடத்தியவர்கள் விநாயகரை வைத்து பூஜை

போராட்டம் நடத்தியவர்கள் விநாயகரை வைத்து பூஜை


ADDED : ஆக 28, 2025 02:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 28, 2025 02:08 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களின் கூட்டு போராட்ட குழு, 3வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில், கோரிக்கைகளை நிறைவேற்ற விநாயகரை வைத்து சிறப்பு பூஜை செய்தனர்.

புதுச்சேரி நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்களின் 4 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி, உள்ளாட்சித்துறை அலுவலகம் முன்,3வது நாளாக நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கதிரேசன் தலைமை தாங்கினார். வேளங்கன்னிதாசன், ஆனந்த கணபதி, கலியபெருமாள், சகாயராஜ், மண்ணாதான், முருகையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிரேமதாசன், பாலாஜி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

உள்ளாட்சி துறையில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஊழியர்களுக்கு 7வது, ஊதியக்குழு பரிந்துரைப்படி, 33 மாத நிலுவை தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலிறுத்தினர்.

3வது நாளாக நேற்று நடந்த போராட்டத்தில், கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற, பெரிய அளவில் விநாயகரை வைத்து, ஊழியர்கள் சிறப்பு பூஜை செய்து வழிபாடு செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us