ADDED : ஆக 29, 2026 11:25 PM
புதுச்சேரி: சட்டசபை மானிய கோரிக்கையின் மீது ஜான்குமார் எம்.எல்.ஏ., பேசியதாவது:
மழைக்காலம் நெருங்குவதால், நீர்வரத்து வாய்க்கால்களை துார் வார வேண்டும். வேல்ராம்பட்டு மெயின் ரோட்டில் பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும். சுதானா நகர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு புதிய போர்வெல் அமைக்க வேண்டும்.
பூங்காக்களை சரி செய்ய வேண்டும். அங்கன்வாடி மையங்களுக்கு ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். தேங்காய்திட்டு முதல் முருங்கப்பாக்கம் வரை சாலையை அகலபடுத்த வேண்டும். முதலியார்பேட்டை பிரதான மேம்பாலத்தின் கீழ் கார் பாக்கிங் மற்றும் சமூக விரோத செயல்கள் நடக்கிறது.
எனவே அங்கு பூங்கா அமைக்க வேண்டும். இந்திரா சதுக்கம் முதல் ராஜிவ் சதுக்கம் வரை ரூ.450 கோடி மேம்பாலம் அமைக்காமல், சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும். வம்பாகீரப்பாளையம் பகுதியில் உள்ள மாங்குரோவ் காடுகளை பாதுகாக்க வேண்டும். மொழியியல் பண்பாட்டு நிறுவனத்தில், பணியாளர் பற்றாக்குறையை போக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
