/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வீடு கட்டும் பயனாளிகளுக்கு ரூ.11.70 லட்சம் நிதி வழங்கல்
/
வீடு கட்டும் பயனாளிகளுக்கு ரூ.11.70 லட்சம் நிதி வழங்கல்
வீடு கட்டும் பயனாளிகளுக்கு ரூ.11.70 லட்சம் நிதி வழங்கல்
வீடு கட்டும் பயனாளிகளுக்கு ரூ.11.70 லட்சம் நிதி வழங்கல்
ADDED : அக் 25, 2025 04:08 AM

அரியாங்குப்பம்: பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், மணவெளி தொகுதியை சேர்ந்த, 15 பயனாளிகளுக்கு 11.70 லட்சம் நிதி உதவிக்கான அரசாணையை, சபாநாயகர் செல்வம் வழங்கினார்.
குடிசை மாற்று வாரியத்தின் சார்பில், வீட்டு கட்டும் திட்டத்தில், மணவெளி தொகுதியில், முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் தவணையில், நிதி உதவிக்கான அரசாணை வழங்கும் நிகழ்ச்சி, தவளக்குப்பம் எம்.எல்.ஏ., அலுவலகத்தில் நடந்தது.
சபாநாயகர் செல்வம், 15 பயனாளிகளுக்கு மொத்தம் 11.70 லட்சம் நிதி உதவிக்கான அரசாணையை வழங்கினார். குடிசை மாற்று வாரியத்தின் இளநிலை பொறியாளர் பாஸ்கரன், பா.ஜ., பிரமுகர்கள் கிருஷ்ணமூர்த்தி, தொகுதி தலைவர் லட்சுமிகாந்தன், சக்திபாலன், சக்திவேல் உடனிருந்தனர்.

