/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் சகஸ்ரநாம அர்ச்சனை
/
லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் சகஸ்ரநாம அர்ச்சனை
ADDED : பிப் 27, 2026 05:03 AM

புதுச்சேரி: முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் பெருமாள் கோவிலில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் தேர்ச்சி பெற வேண்டி சகஸ்ரநாம அர்ச்சனை நடந்தது.
பொதுத் தேர்வு எழுதி வரும் மாணவர்கள் அதிக மதிப்பெண்பெற்று தேர்ச்சி பெற வேண்டி, முத்தியால்பேட்டை, ராமகிருஷ்ணா நகர், லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் 23ம் ஆண்டு சகஸ்கர நாம அர்ச்சனை நடைபெற்று வருகிறது.
அர்ச்சனை பொதுத்தேர்வு நடக்கும் அனைத்து நாட்களிலும் காலை 10:30 மணிக்கு மாணவர்கள் பெயர், நட்சத் சங்கல்பம் செய்து, சகஸ்கர திரம், ராசி ஆகியவற்றை தெரிவித்து, நாம அர்ச்சனையில் பங்கேற்கலாம். இதில் கலந்து கொள்ளும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு சகஸ்கர நாம புத்தகம், ஹயக்ரின எழுதும் புத்தகம், ரக்சை, பேனா, தேன் பிரசாதமாக வழங்கப்படும்.
இந்த சகஸ்ரநாம அர்ச்சனையில் கலந்து கொள்ள விரும்புவோர் கோவிலில் ரூ. 750 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.
மேலும், விபரம் வேண்டுவோர் 9095428302, 89400 93478 ஆகிய மொபைல் எண்களை தொடர்பு கொள்ளலாம்.

