ADDED : அக் 05, 2024 11:10 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருபுவனை: அரியூர் அடுத்த நவமால்காப்பேர், காயத்ரி நகரை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி 74; தனியார் கம்பெனி செக்யூரிட்டி. கடந்த சில மாதங்களாக கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.
இதனால் மனமுடைந்தஅவர் நேற்று முன்தினம் மதியம் வீட்டில் விஷம்குடித்து மயங்கி விழுந்தார்.
புதுச்சேரி அரசு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இறந்தார்.
புகாரின் பேரில், கண்டமங்கலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.