தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து கையெழுத்து இயக்கம்

துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து கையெழுத்து இயக்கம்

துறைமுக விரிவாக்கத்தை எதிர்த்து கையெழுத்து இயக்கம்


UPDATED : செப் 08, 2026 08:40 PM

ADDED : செப் 08, 2026 08:30 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 08, 2026 08:40 PM ADDED : செப் 08, 2026 08:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் எஸ்.சி,எஸ்.டி.,மக்கள் நலக்கூட்டமைப்பின் சார்பில் புதிய பேருந்து நிலையம் அருகில் செப்., 7 அன்று காரைக்கால் துறைமுகம் விரிவாக்கத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கையெழுத்து இயக்கம் நடந்தது.

கூட்டமைப்பின் தலைவர் ஆசிரியர் காமராஜ் தலைமையில் நடந்தது.அதை சுற்றியுள்ள பகுதிகள்,நிறுவன முதலாளிகள், தொழிலாளிகள் மற்றும் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரிடமும் கையெழுத்து பெறப்பட்டது. இதில் காரைக்கால் துறைமுகம் விரிவாக்கம் குறித்த கருத்து கோட்பு கூட்டத்தில் புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் செயலர் ரமேஷிடம் மனு அளிக்கவுள்ளனர்.

இதில் தற்போது துறைமுகத்தில் 21.5 மெட்ரிக் டன் நிலக்கரி கையாளப்படும் போதே பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. எனவே 100.3 மெட்ரிக் டன் சரக்குகளை கையாளும் வகையில் துறைமுக விரிவாக்க நடவடிக்கைகளை முற்றிலும் கைவிட வேண்டும் என கூட்டமைப்பினர்களுக்கு வலியுறுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us