/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
குமரேஸ்வரர் கோவிலில் சூரசம்ஹாரம் விழா
/
குமரேஸ்வரர் கோவிலில் சூரசம்ஹாரம் விழா
ADDED : அக் 25, 2025 11:11 PM
நெட்டப்பாக்கம்: கரிக்கலாம்பாக்கம் குமரேஸ்வரர் கோவிலில் சூரசம்ஹாரம் விழா நாளை மாலை நடக்கிறது.
நெட்டப்பாக்கம் அடுத்த கரிக்கலாம்பாக்கம் வள்ளி தேவசேனா சமேத குமரேஸ்வரர் கோவிலில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா கடந்த 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது.
இதையொட்டி, தினமும் சுவாமிக்கு காலை சிறப்பு அபி ேஷக ஆராதனைகளும், இரவு சுவாமி வீதியுலா நடந்து வருகிறது. இன்று மாலை 6:30 மணிக்கு குமரேஸ்வர் சுவாமி, அம்மனிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சியும், நாளை மாலை சூரசம்ஹாரம் நடக்கிறது. 28ம் தேதி இரவு திருக்கல்யாண உற்சவம், 30ம் தேதி காலை ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்துள்ளனர்.

