/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாரம் சுப்பரமணியசுவாமி கோவிலில் நடந்த சூரசம்ஹாரம் விழா
/
சாரம் சுப்பரமணியசுவாமி கோவிலில் நடந்த சூரசம்ஹாரம் விழா
சாரம் சுப்பரமணியசுவாமி கோவிலில் நடந்த சூரசம்ஹாரம் விழா
சாரம் சுப்பரமணியசுவாமி கோவிலில் நடந்த சூரசம்ஹாரம் விழா
ADDED : அக் 28, 2025 06:13 AM

புதுச்சேரி: சாரம் சுப்பரமணியசுவாமி கோவிலில் நடந்த சூரசம்ஹாரம் விழாவில் கவர்னர் பங்கேற்று சாமி தரிசனம் செய்தார்.
புதுச்சேரி சாரம் முத்துவிநாயகர், வள்ளி தேவசேனா சமேத சுப்பரமணிய சுவாமி, நாகமுத்துமாரியம்மன் கோவிலில், கந்த சஷ்டி சூரசம்ஹார பிரமோற்சவ விழா கடந்த 21ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. இதையொட்டி இரவு 7 மணிக்கு அம்மனுக்கு அபி ேஷக ஆராதனைகள், தீபாரதனை நடந்தது. 22ம் தேதி காலை 10.30 மணிக்கு காப்பு கட்டுதல் தொடர்ந்து கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது. இரவு 8 மணிக்கு அன்னவாகனத்தில் வீதியுலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். வரும் 3ம் தேதி வரை காலை, மாலை இருவேளையும் யாக சாலை பூஜையும், இரவில் சாமி வீதி உலாவும் நடக்கிறது. முக்கிய நிகழ்சியான சூரசம்ஹார விழா நேற்று இரவு நடந்தது.
முன்னதாக வேல்வாங்குதல், மற்றும் ஆட்டுகிடா வாகனத்தில் சூரசம்ஹாரம் நடந்தது. இதில் கவர்னர் கைலாஷ்நாதன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரவு மயில் வாகனத்தில் வீதியுலா நடந்தது. இன்று இரவு 7 மணிக்கு வள்ளி தேவசேனா-சுப்பரமணியசுவாமி திருக்கல்யாணமும், 30ம் தேதி இரவு 8.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல், 31ம் தேதி மாலை 5 மணிக்கு மஞ்சள் நீர் உற்சவமும், 3ம் தேதி காலை 8 மணிக்கு விடையாற்றி உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி பொன்.நீலகண்டன் மற்றும் உபயதாரர்கள், கிராம மக்கள் செய்திருந்தனர்.
கவுசிக பாலசுப்ரமணியர்:
ரயில் நிலையம் எதிரே பிரசித்திபெற்ற கவுசிக பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த மாதம் 22-ந் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. நேற்று சூரசம்ஹார விழா விமர்சையாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

