/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஓய்வு பெறும் போலீஸ் அதிகாரிகளுக்கு நினைவு பரிசு
/
ஓய்வு பெறும் போலீஸ் அதிகாரிகளுக்கு நினைவு பரிசு
ADDED : ஜன 31, 2026 05:44 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி காவல் துறையில் பணியாற்றி ஓய்வு பெறும் போலீஸ் அதிகாரிகளுக்கு டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம் நினைவு பரிசு வழங்கினார்.
புதுச்சேரி போலீஸ் துறையில் பணியாற்றி, இன்று பணியிலிருந்து ஓய்வு பெறும் எஸ்.பி., முருகையன், சப் இன்ஸ்பெக்டர்கள் உமேஷ் பாபு, மணிமொழி, ராமகிருஷ்ணன், உதவி சப் இன்ஸ்பெக்டர்கள் சவுரியமூர்த்தி, ஆறுமுகம், சந்திரமூர்த்தி கிரேடு - 1 (ஓட்டுநர்) ஆகியோருக்கு நேற்று புதுச்சேரி டி.ஜி.பி., அலுவலகத்தில் டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம், அவர்களது சேவையை பாராட்டி நினைவு பரிசு வழங்கினார். இதில் ஓய்வு பெறும் போலீஸ் அதிகாரிகள் குடும்பத்துடன் கலந்துகொண்டனர்.

