/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு ரவுடியுடன் மாணவர் கோர்ட்டில் சரண்
/
வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு ரவுடியுடன் மாணவர் கோர்ட்டில் சரண்
வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு ரவுடியுடன் மாணவர் கோர்ட்டில் சரண்
வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு ரவுடியுடன் மாணவர் கோர்ட்டில் சரண்
ADDED : நவ 06, 2025 01:37 AM

புதுச்சேரி: புதுச்சேரி அடுத்த தமிழக பகுதியான விழுப்புரம் மாவட்டம், வானுார் அடுத்த பட்டானுாரை சேர்ந்தவர் கமலேஷ், 20. புதுச்சேரி முருங்கப்பாக்கத்தில் உள்ள தேசிய பாதுகாப்பு பல்கலையில், இளநிலை குற்றவியல் படித்து வந்தார்.
கோரிமேடு பகுதியை சேர்ந்த பெண்ணை இவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அதை அறிந்த தட்டாஞ்சாவடி ரிச்சர்டு மற்றும் அவரது மகன் விபிஷன் ஆகியோர், கமலேஷை தாக்கியதாக கூறப்படுகிறது. அதில் ஆத்திரமடைந்த கமலேஷ், சமீபத்தில் சிறையில் இருந்து வெளியே வந்த தன் நண்பர், ரவுடி விஜய், 25, என்பவரிடம் கூறினார்.
இருவரும் நேற்று முன்தினம் இரவு, பைக்கில் சென்று, ரிச்சர்டு வீட்டின் மீது பெட்ரோல் வெடிகுண்டை வீசினர். அது, வெடித்து தீப்பிடித்து எரிந்தது. இதில், ரிச்சர்டு உட்பட யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
இருப்பினும், வெடிச் சத்தம் கேட்டு பொதுமக்கள் அங்கு திரண்டனர்; விஜய், கமலேஷ் அங்கிருந்து தப்பினர்.
சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். ரிச்சர்டு அளித்த புகாரில், போலீசார் கொலை முயற்சி உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் வழக்கு பதிந்து விஜய், கமலேஷ் ஆகியோரை தேடி வந்தனர்.
இந்நிலையில், இருவரும் நேற்று காலை புதுச்சேரி கோர்ட்டில் சரண் அடைந்தனர். இருவரையும் கைது செய்து, 15 நாள் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இருவரும் காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

