ADDED : பிப் 17, 2024 11:22 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர்: கிருமாம்பாக்கம் அரசு தொடக்கப் பள்ளியில், மாணவர்கள் கலை திருவிழா நடந்தது.
பள்ளிக் கல்வித்துறை மூன்றாம் வட்டம் ஆய்வாளர் லிங்குசாமி துவக்கி வைத்தார். தனி நடனம், குழு நடனம், மகளிர் உரிமை பற்றிய பேச்சு போட்டி, சுத்தமும் சுகாதாரமும் என்ற தலைப்பில் நாடகம், குழந்தைகளுக்கு வண்ணம் தீட்டுதல், வினாடி வினா உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. 30 தொடக்கப் பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.