sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

தமிழ் மரபு உணவுத் திருவிழா

/

தமிழ் மரபு உணவுத் திருவிழா

தமிழ் மரபு உணவுத் திருவிழா

தமிழ் மரபு உணவுத் திருவிழா


ADDED : மார் 24, 2025 04:27 AM

Google News

ADDED : மார் 24, 2025 04:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரியில், தமிழ்த்துறை மற்றும் கல்லுாரி தர உறுதியளிப்பு குழு சார்பில், தமிழ் மரபு உணவுத் திருவிழா 2025 நடந்தது.

விழாவிற்கு, கல்லுாரி முதல்வர் வீரமோகன் தலைமை தாங்கி, தமிழ் மரபு உணவுக் கண்காட்சியை துவக்கி வைத்து பேசினார். அதில், சிறு தானிய உணவுகளை நாம் உட்கொள்ளும்போது, அவை குளுக்கோஸ் என்ற சர்க்கரையை மெதுவாக வெளியிடுகின்றன. இதனால் உடலில் சர்க்கரையின் அளவு திடீரென அதிகரிப்பது தடுக்கப்படும்.

செரிமானமும் மெதுவாக நடைபெறும் என்றார். ஒருங்கிணைப்பாளர் மணி வரவேற்றார். தமிழ்த்துறை தலைவர் சுரேஷ் கருத்துரை வழங்கினார். கவிஞர் சுஜாதா சரவணன், மரபு உணவுகளின் முக்கியத்துவம் குறித்து பேசினார். இதில், ஊன்துவை அரிசியில் (பிரியாணி), கருப்பு இட்லி, புதுச்சேரி மீன் குழம்பு, நாட்டுக்கோழிக் குழம்பு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட பழந்தமிழ் உணவு வகைகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

மாணவிகள் விக்னேஸ்வரி, அருள்மொழி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். ஏற்பாடுகளை தமிழ்த்துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர். மாணவி புவனேஸ்வரி நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us