ADDED : செப் 11, 2025 03:04 AM
அ நிறம் | அளவு
அரியாங்குப்பம்: தவளக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தின விழா, கொண்டாடப்பட்டது.
பள்ளியில் நடந்த விழாவில், பள்ளி துணை முதல்வர் ராஜசேகரன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் நுார் முகமது வரவேற்றார். சபாநாயகர் செல்வம், சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில், ஆசிரியர்கள் சுகுமார், மணி, கிரிஜா, கவுரி, சித்ரா, நமச்சிவாயம், பத்மாவதி, முத்துக்கருப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆசிரியர் ஆருத்ரா சங்கநிதி நன்றி கூறினார்.
