/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பச்சைவாழியம்மன் கோவிலில் தெப்பல் உற்சவம்
/
பச்சைவாழியம்மன் கோவிலில் தெப்பல் உற்சவம்
ADDED : ஆக 10, 2025 08:47 AM

பாகூர் :கன்னியக்கோவில் பச்சைவாழியம்மன் கோவிலில் நடந்த தெப்பல் உற்சவத்தில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
புதுச்சேரி - கடலுார் சாலை கன்னியக்கோவிலில் பிரசித்தி பெற்ற மன்னாதீஸ்வரர் உடனுறை பச்சைவாழி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில், தீ மிதி திருவிழா கடந்த 31ம் தேதி துவங்கியது.
தினமும், அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது. முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. நேற்று தெப்பல் உற்சவம் நடந்தது.
இதையொட்டி, இரவு 7:00 மணியளவில், சுப்ரமணியர் வள்ளி தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில், கோவிலின் தெப்ப குளத்தில் எழுந்தருளினர். திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி மாறன் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

