/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
திருநள்ளாறு சனிபகவான் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
/
திருநள்ளாறு சனிபகவான் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
திருநள்ளாறு சனிபகவான் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
திருநள்ளாறு சனிபகவான் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
ADDED : மார் 22, 2026 03:24 PM

காரைக்கால்: காரைக்கால் சனி பகவான் கோவிலில் நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
காரைக்கால், திருநள்ளாறு சனி பகவான் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா கடந்த 6ம் தேதி நடந்தது. அதைதொடர்ந்து தினசரி நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து பல்லாயிரக்காணக்கான பக்தர்கள் சனி பகவானை தரிசனம் செய்து வருகின்றனர்.
சனிப்பெயர்ச்சி முடிந்து நேற்று மூன்றாவது சனிக்கிழமை அதிகாலை 4:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. சனி பகவான் வெள்ளிக்கவசத்துடன் பக்தர்களுக்கு அருள்பலித்தார். முன்னதாக பக்தர்கள் நளன் குளத்தில் நீராடி, கலிதீர்த்த விநாயகரை வணங்கி, தோஷம் போக்க சிதர் தேங்காய் உடைத்து, பின், சனிபகவானை வழிபட்டனர்.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் 3 மணி நேரம் வரை காத்திருந்து சனி பகவானை தரிசனம் செய்தனர். எஸ்.பி.,பழனிவேல் தலைமையில் போலீசார் மற்றும் துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்தனர்.

