ADDED : ஜன 15, 2024 06:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம் : கல்மண்டபம் பகுதியில் இயங்கி வரும் தனியார் டயர் தொழிற்சாலையில், கடந்த 13ம் தேதி இரவு 10.30 மணியளவில் கம்பெனி செக்யூரிட்டி ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது அடையாளம் தெரியாத 2 வாலிபர்கள் கம்பெனி பின்புறம் உள்ள மதில் சுவரில் ஏறி 6 கார் டயர்களை திருடி எடுத்துச் சென்றனர்.
இதுகுறித்து செக்யூரிட்டி அதிகாரி கணேசன் கொடுத்த புகாரின் பேரில் நெட்டப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிந்து டயர் திருடிச் சென்ற நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.