sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 வாய்க்கால் அமைக்க மரம் வெட்டி அகற்றம்

/

 வாய்க்கால் அமைக்க மரம் வெட்டி அகற்றம்

 வாய்க்கால் அமைக்க மரம் வெட்டி அகற்றம்

 வாய்க்கால் அமைக்க மரம் வெட்டி அகற்றம்


ADDED : நவ 24, 2025 06:15 AM

Google News

ADDED : நவ 24, 2025 06:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாகூர்: காட்டுக்குப்பம் பகுதியில் வாய்க்கால் அமைக்கும் பணிக்கு இடையூறாக இருந்த பழமையான மரம் வெட்டி அகற்றப்பட்டது.

புதுச்சேரி பொதுப்பணித் துறை சார்பில், புதுச்சேரி - கடலுார் சாலை காட்டுக்குப்பம் முதல் கன்னியக்கோவில் வரை 3 கோடியே 37 லட்ச ரூபாய் செலவில், 'யு' வடிவ வடிகால் அமைக்கும் பணியை, கடந்த பிப்., மாதம் 3ம் தேதி முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார்.

தொடர்ந்து, கான்கீரிட் சுவர் மூலமாக கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. காட்டுக்குப்பம் அடுத்த வாய்க்கால் ஓடை சந்திப்பில் இருந்து பழமையான துாங்கு மூஞ்சு மரம் வாய்க்கால் அமைக்கும் பணிக்கு இடையூறாக இருந்ததால், அப்பகுதியில் பணி கிடப்பில் போடப்பட்டது.

இந்நிலையில், அந்த மரம் நேற்று வெட்டி அகற்றப்பட்டது. அந்த பகுதியில் வாய்க்கால் அமைக்கும் பணியை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். அதேநேரம், வெட்டப்பட்ட மரத்திற்கு ஈடு செய்யும் வகையில், மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us