ADDED : டிச 27, 2025 05:10 AM
அ நிறம் | அளவு
அரியாங்குப்பம்: சுனாமி நினைவு தினத்தையொட்டி, வீராம்பட்டினம் கடற்கரையில், இறந்தவர்களுக்கு, அஞ்சலி செலுத்தப்பட்டது.
வீராம்பட்டினம் கடற்கரையில் உள்ள சுனாமி நினைவு இடத்தில் வீராம்பட்டினம் பகுதியை சேர்ந்த மீனவர்கள், சுனாமி பேரலையில் இறந்தவர்களுக்கு கடலில் பால், ஊற்றி மலர்கள் துாவி அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில், பாஸ்கர் எம்.எல்.ஏ., உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அதைத் தொடர்ந்து, ஜே.சி.எம்., சார்பில், சார்லஸ் மார்டின், அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
