ADDED : நவ 27, 2024 05:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : சின்னவாய்க்காலில் இறந்து கிடந்தவரை பற்றி, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி, கபித்தான் மரி வீதி, சின்னவாய்க்காலில், 50 வயது மதிக்கதக்க ஒருவர் நேற்று முன்தினம் இறந்து கிடந்தார். அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என எந்த விபரம் தெரியவில்லை. இதுகுறித்து, ஒதியன்ஞ்சாலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.