sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

காரைக்கால் சிறையில் போதை பொருட்கள் சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

/

காரைக்கால் சிறையில் போதை பொருட்கள் சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

காரைக்கால் சிறையில் போதை பொருட்கள் சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

காரைக்கால் சிறையில் போதை பொருட்கள் சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்


ADDED : ஜூன் 18, 2025 04:56 AM

Google News

ADDED : ஜூன் 18, 2025 04:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்கால்: காரைக்கால் சிறையில் போதை பொருட்கள் புழங்குவதாக சமூக வலைதளத்தில் வைரலாகி வருவது பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

காரைக்கால், மதகடி பகுதியில் கிளை சிறைச்சாலை இயங்கி வருகிறது. இங்கு, தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் என மொத்தம் 40 பேர் உள்ளனர்.

இந்நிலையில் சிறையில் தண்டனை முடித்து கடந்த 13ம் தேதி வெளியே வந்த, காரைக்கால்மேடு மீனவ கிராமத்தை சேர்ந்த தினேஷ், சிறையில் நடக்கும் பல்வேறு பிரச்னைகள் குறித்து வெளியிட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியள்ளது.

அதில், இரட்டை கொலை வழக்கு தண்டனை கைதி ஒருவர், சிறைக்கு வரும் கைதிகளை மிரட்டி தாக்குவதாவும், தண்டனை கைதி ஒருவரின் உதவியுடன் சிறைகாவலர்கள், சிறைக்கு வரும் கைதியிடம் பணம் பறிக்கின்றனர். சரியான முறையில் உணவு வழங்குவதில்லை.

கைதிகளை பார்க்க வரும் குடும்பத்தார் வாங்கி வரும் பழம்,பிஸ்கட் உள்ளிட்ட பொருட்களை சரியாக கைதிகளுக்கு வழங்குவதில்லை.

மேலும் முக்கிய நபர்களுக்கு பிறந்தநாள் என்றால் பிரியாணி விருந்து மற்றும் சிறை கைதிகளுக்கு வெளியிலிருந்து போதை பொருட்கள் வழங்கப்படுகிறது. இதனை சிறை அதிகாரிகள் எவரும் கண்டு கொள்வதில்லை என குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து சிறை அதிகாரிகள் கூறியதாவது:

சிறைக்கு வரும் புது கைதிகளை தண்டனை கைதிகள் மிரட்டுவது குறித்த புகார் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

கைதிகளுக்கு, உறவினர்கள் கொடுக்கும் பழம், பிஸ்கட் உள்ளிட்ட பொருட்கள் உரிய சோதனைக்கு பின் உரிய கைதிகளிடம் கொடுக்கப்படுகிறது.

கைதிகள் அவர்களது உறவினர்களிடம் பேச, தொலைபேசி வசதி உள்ளது. சிறையில் எவ்வித பிரச்னையும் இல்லை என்றனர்.






      Dinamalar
      Follow us