/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வில்லியனுார் மாதா ஆலய ஆண்டு பெருவிழா தேர்பவனி
/
வில்லியனுார் மாதா ஆலய ஆண்டு பெருவிழா தேர்பவனி
ADDED : மே 05, 2025 05:21 AM
வில்லியனுார் : வில்லியனுார் துாய லுார்து அன்னை ஆலய ஆண்டு பெருவிழா தேர் பவனி நேற்று நடந்தது.
ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு, கடந்த 26ம் தேதி கொடியேற்றம் நடந்தது.
தொடர்ந்து தினமும் காலை, மாலையில் சிறப்பு திருப்பலி, இரவு 7:00 மணிக்கு மேல் அலங்கரிக்கப்பட்ட தேர் பவனி நடந்து வருகிறது.முக்கிய விழாவான ஆண்டு பெருவிழா நேற்று நடந்தது.
விழாவை முன்னிட்டு காலை 7:30 மணிக்கு கும்பகோணம் மறை மாவட்ட முன்னாள் ஆயர் அந்தோணிசாமி தலைமையில் சிறப்பு கூட்டு திருப்பலி, மாலை 6:00 மணியளவில் புதுவை-கடலுார் உயர் மறைமாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் தலைமையில் சிறப்பு திருப்பலி, இரவு 7:30 மணிக்கு மேல் அலங்கரிக்கப்பட்ட தேரில் மாதா சொரூபத்தில் வைரகிரீடம் சூட்டப்பட்டு ஆடம்பர தேர் பவனி நடந்தது.தேர் திருவிழாவில் புதுச்சேரி, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இன்று (5ம் தேதி) காலை 6:30 மணி திருப்பலிக்கு பின், கொடியிறக்கம் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை அருட்தந்தையர்கள் ஆல்பர்ட், ஆல்வின் அன்பரசு, தோமினிக் சாவியோ, அலெக்சிஸ், பங்கு பேரவை துணைத் தலைவர் சூசைமியநாதன் டொமினிக், பொருளாளர் தர்மதுரை, செயலர் ஜெயராஜ், பெஞ்சமின் உட்பட பலர் செய்திருந்தனர்.

