/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
குடிநீர் சுத்திகரிப்பு நிலைய பணிகள் துவங்கியது
/
குடிநீர் சுத்திகரிப்பு நிலைய பணிகள் துவங்கியது
ADDED : பிப் 21, 2024 11:20 PM

புதுச்சேரி :உருளையன்பேட்டையில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலைய பணிகளை, நேரு எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
உருளையன்பேட்டை தொகுதியில், புதுநகர், குபேர்நகர், வாஞ்சிநாதன் வீதி, சுப்ரமணிய சிவா வீதி, காமராஜர் வீதி, அந்தோணியார் கோவில் வீதி உள்ளிட்ட பகுதி மக்கள் பயன்பெற, குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க, அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து குபேர் நகர், 5வது குறுக்கு வீதியில், நகராட்சி இடத்தில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான பணிகள் துவக்க நிகழ்ச்சி நடந்தது. பணிகளை, நேரு எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். இதற்கான திட்ட மதிப்பீடு ரூ.11 லட்சம்.
பொதுப்பணித்துறை பொது சுகாதார செயற்பொறியாளர் உமாபதி, பொதுப்பணித்துறை குடிநீர் வழங்கல் பிரிவு உதவி பொறியாளர் வாசு, இளநிலை பொறியாளர் வெங்கடேசன், ஆய்வாளர் கணேசன், மனிதநேய மக்கள் சேவை இயக்கத்தினர், அப்பகுதி மக்கள் பலர் பங்கேற்றனர்.