நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: அதிகமாக குடித்த வெல்டர் பரிதாபமாக இறந்தார்.
வில்லியனுார், தில்லை நகரைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 49; வெல்டர். குடிப்பழக்கம் உள்ள இவர் வேலைக்கு சென்று வரும் போது குடித்துவிட்டு வீட்டிற்கு வருவது வழக்கம். கடந்த 30ம் தேதி வேலைக்கு செல்வதாக கூறிச் சென்றவர் வீட்டிற்கு வரவில்லை.
இந்நிலையில் நேற்று முன்தினம் காலை வில்லியனுார் மேற்கு மாட வீதி பகுதியில் இறந்து கிடந்தார். புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

