sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

சேது செல்வம் விலகியது ஏன்? இந்திய கம்யூ., மாநில செயலாளர் விளக்கம்

/

சேது செல்வம் விலகியது ஏன்? இந்திய கம்யூ., மாநில செயலாளர் விளக்கம்

சேது செல்வம் விலகியது ஏன்? இந்திய கம்யூ., மாநில செயலாளர் விளக்கம்

சேது செல்வம் விலகியது ஏன்? இந்திய கம்யூ., மாநில செயலாளர் விளக்கம்


ADDED : நவ 10, 2025 11:22 PM

Google News

ADDED : நவ 10, 2025 11:22 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: கட்சியின் ஒழுங்கு நடவடிக்கையை மறைக்கவே சேது செல்வம், கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் என இந்திய கம்யூ., மாநில செயலாளர் சலீம் கூறினார்.

இதுகுறித்து அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

இந்திய கம்யூ., கட்சியின் நிர்வாக குழு உறுப்பினராக இருந்த சேது செல்வம் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அதற்கு அவர் கூறிய காரணம் உண்மை அல்ல.

அவர் கட்சி கொள்கைக்கு எதிராக, பிரெஞ்சு குடியுரிமை பெற்றவரின் இடத்தை தி.மு.க.,வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் சிவக்குமார் காலி செய்யாத விவகாரத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்து ரூ.15 லட்சம் பெற்றதாக புகார் வந்தது.

அதுகுறித்து, அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டது. முதலில் மறுத்தவர், பின் ஆதாரங்களுடன் நிருபிக்கப்பட்டதும் பணம் பெற்றதை ஒப்புக் கொண்டார். அதனைத் தொடர்ந்து, கடந்த 7ம் தேதி அவரை கட்சியில் இருந்து ஓராண்டிற்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதற்கு அவர் உடன்பட்டு, கையெழுத்தும் இட்டார். இதையெல்லாம் மறைத்து அவர் தவறான கருத்துகளை தெரிவித்துள்ளார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.






      Dinamalar
      Follow us