ADDED : ஜூன் 30, 2025 04:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம், : குடிப்பழக்கம் மனைவி கண்டிப்பால் டிரைவர் மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஏரிப்பாக்கம், புதுக்காலனி மூன்றாவது தெருவைச் சேர்ந்தவர் அஞ்சாபுலி, 55; டிரைவர். குடிப்பழக்கம் உள்ள இவர் வேலைக்கு செல்லாமல் குடித்து விட்டு வருவதால் அவரது மனைவி கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த அஞ்சாபுலி மாட்டு உனி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார்.
அவரை உறவினர்கள் மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். புகாரின் பேரில் நெட்டப்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.