/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாலையோர மரங்களில் 'ரிப்ளக்டர்' பொருத்தப்படுமா?
/
சாலையோர மரங்களில் 'ரிப்ளக்டர்' பொருத்தப்படுமா?
ADDED : ஏப் 14, 2026 09:23 PM
நெட்டப்பாக்கம்: வடமங்கலம் முதல் ஏம்பலம் வரை சாலையோர உள்ள மரங்களில் பிரதிப்பலிப்பான் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுச்சேரியிலிருந்து வடமங்கலம், மங்கலம், ஏம்பலம் வழியாக மடுகரை, கரையாம்புத்துார் பகுதிக்கு தினமும் பஸ், கனரக வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. போக்குவரத்து மிகுந்த இந்த சாலையில், வடமங்கலம் தொழிற்பேட்டை பகுதியிலிருந்து ஏம்பலம் வரை சாலையோரத்தில் ஏராளமான புளிய மரம், பனை மரங்கள் உள்ளன.
இந்த மரங்கள் சாலையோரத்தில் இருப்பதால், வெளியூரிலிருந்து வரும் வாகன ஓட்டிகளுக்கு இரவு நேரங்களில் மரங்கள் இருப்பது தெரியமால், மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகி வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன், புதுக்குப்பம் பகுதியில் இரவு நேரத்தில் பைக்கில் வந்த முதியவர் சாலையோர புளியமரத்தில் மோதி இறந்தார்.
எனவே, வாகன ஓட்டிகளின் நலன் கருதி வடமங்கலம் தொழிற்பேட்டை முதல் ஏம்பலம் வரை, சாலையோரங்களில் உள்ள மரங்களில் பிரதிப்பலிப்பான பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

