ADDED : ஜூன் 22, 2026 03:48 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: கூலித்தொழிலாளி துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கனகசெட்டிக்குளம், பிள்ளையார் கோவில் தெ ருவைச் சேர்ந்தவர் சொக்கலிங்கம். இவரது வீட்டின் இரண்டாவது மாடியில் கருப்பம்புலன் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளியான பிரியதர்ஷன், 44. என்பவர், வாடகை இருந்து வருகிறார்.
நேற்று முன்தினம் காலை பிரியதர்ஷனுடன், வேலை செய்யும் கோபிநாதன் அவரை அழைக்க வீட்டிற்கு சென்றார்.
பிரியதர்ஷன் அவரது அறையில் உள்ள மின் விசிறியில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
புகாரின் பேரில், காலப்பட்டு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
