/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆண்டு முழுதும் வேலை : கவர்னரிடம் மக்கள் கோரிக்கை
/
ஆண்டு முழுதும் வேலை : கவர்னரிடம் மக்கள் கோரிக்கை
ஆண்டு முழுதும் வேலை : கவர்னரிடம் மக்கள் கோரிக்கை
ஆண்டு முழுதும் வேலை : கவர்னரிடம் மக்கள் கோரிக்கை
ADDED : ஜன 22, 2026 05:35 AM

நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கத்தில் 125 நாட்கள் பணி நடக்கும் இடத்தை கவர்னர் கைலாஷ்நாதன் பார்வையிட்டார்.
அப்போது கவர்னர் அங்கு 125 நாள் வேலைத் திட்ட பணிகளை செய்வோரிடம் கலந்துரையாடினார்.
கவர்னர்; வேலை செய்தால் எவ்வளவு கூலி கிடைக்கும், எத்தனை நாட்கள் வேலை கொடுக்கிறார்கள், ஏ.டி.எம்., கார்டு வைத்துள்ளீர்களா.
அங்கு வேலை செய்த பெண்கள்; வேலை செய்தால் தினமும் 300 ரூபாய் கிடைக்கும். கடந்த வருடம் 30 நாட்கள் தான் வேலை கிடைத்தது. தொடர்ந்து வேலை தருவதாக கூறுகின்றனர். ஆனால் கொடுப்பதில்லை. ஏ.டி.எம்., கார்டு இருந்தா பிள்ளைங்க எடுத்துக்குவாங்க.
கவர்னர்; வருஷத்துக்கு வேலை செய்தால் எவ்வளவு பணம் கிடைக்கும்.
பெண்கள்; 10 முதல் 14 ஆயிரம் வரை கிடைக்கும். தங்கம் விலை ரூ. 1 லட்சத்தை தாண்டிவிட்டது. அதனால் ஆண்டு முழுதும் வேலை வேண்டும்.
கவர்னர்: அரிசி இலவசமாக கொடுக்கிறார்களாக.
பெண்கள்: கடந்த நான்கு ஆண்டுகள் போடவில்லை. பிறகு 3 மாதங்கள் கொடுத்தனர். அதன்பிற்கு ஆறு மாதம் போடவில்லை. தற்போது போடுகின்றனர். மாதந்தோறும் கரெக்ட்டா அரிசி கொடுங்க.
பின், கவர்னர் கூறுகையில், 'மக்கள் கோரிக்கையை ஆராய்வோம். 125 நாட்கள் புது திட்டம். இது மக்களுக்கு நல்ல திட்டம்' என்றார்.

