ADDED : டிச 31, 2024 06:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர்: பொது இடத்தில் ரகளையில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கிருமாம்பாக்கம் போலீஸ் உதவி சப் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் போலீசார் கடந்த 29ம் தேதி இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, புதுச்சேரி - கடலுார் சாலை கன்னியக்கோவில் சந்திப்பில் ஒருவர் பொதுமக்களை ஆபாசமாக திட்டி ரகளையில் ஈடுபட்டு கொண்டிருந்தர். போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தியதில், கடலுார் முதுநகரை சேர்ந்த முகுந்தன் 26; என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.