ADDED : அக் 01, 2024 06:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம்: பொது இடத்தில் மது போதையில் பொதுமக்களை அவதுாறாக பேசிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
அரியாங்குப்பம் - வீராம்பட்டினம் சாலையில், மது போதையில் நின்று கொண்டு, வாலிபர் ஒருவர் அவ்வழியாக செல்லும் பொதுமக்களை அவதுாறாக பேசி வருவதாக, அரியாங்குப்பம் போலீசாருக்கு நேற்று தகவல் வந்தது. அதனை அடுத்து, போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவர், மணவெளி பெரியார் நகரை சேர்ந்த பன்னீர்செல்வம், 28; என தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.