/
செய்திகள்
/
விளையாட்டு
/
பாட்மின்டன்
/
பாட்மின்டன்: காலிறுதியில் சதிஷ் குமார்
/
பாட்மின்டன்: காலிறுதியில் சதிஷ் குமார்
ADDED : டிச 05, 2024 09:57 PM

கவுகாத்தி: கவுகாத்தி மாஸ்டர்ஸ் பாட்மின்டன் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு இந்தியாவின் சதிஷ் குமார், ஆயுஷ் ஷெட்டி முன்னேறினர்.
அசாமின் கவுகாத்தியில் 'சூப்பர் 100' அந்தஸ்து பெற்ற மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் சதிஷ் குமார் கருணாகரன், மலேசியாவின் ஷோலே அடில் மோதினர். அபாரமாக ஆடிய சதிஷ் குமார் 21-19, 9-21, 21-7 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி 19-21, 22-20, 23-21 என சகவீரர் சங்கர் முத்துசாமியை தோற்கடித்து காலிறுதிக்குள் நுழைந்தார். இந்தியாவின் தருண் 24-22, 15-21, 21-13 என சகவீரர் பிரியான்ஷு ரஜாவத்தை வென்றார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் தன்வி சர்மா, சீனதைபேயின் யி என் ஹசிக் மோதினர். இதில் தன்வி சர்மா 21-19, 21-8 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் மான்சி சிங் 17-21, 21-13, 21-9 என சீனதைபேயின் சென் சு யுவை வென்றார். இந்தியாவின் அன்மோல் கார்ப் 21-9, 21-15 என சகவீராங்கனை தாரா ஷாவை வீழ்த்தினார். இந்தியாவின் தஸ்னிம் மிர் 11-21, 21-18, 24-26 என தாய்லாந்தின் லாலின்ரட் சைவானிடம் தோல்வியடைந்தார்.
கலப்பு இரட்டையர் 2வது சுற்றில் இந்தியாவின் துருவ் கபிலா, தனிஷா கிராஸ்டோ ஜோடி 15-21, 21-10, 21-11 என சகநாட்டை சேர்ந்த ஆயுஷ் அகர்வால், ஸ்ருதி மிஷ்ரா ஜோடியை வீழ்த்தியது.