/
செய்திகள்
/
விளையாட்டு
/
பாட்மின்டன்
/
பாட்மின்டன்: அரையிறுதியில் சிந்து
/
பாட்மின்டன்: அரையிறுதியில் சிந்து
ADDED : நவ 29, 2024 09:29 PM

லக்னோ: சையது மோடி பாட்மின்டன் ஒற்றையர் பிரிவு அரையிறுதிக்கு இந்தியாவின் சிந்து, லக்சயா சென் முன்னேறினர்.
உ.பி., மாநிலம் லக்னோவில், சையது மோடி இந்தியா 'சூப்பர் 300' சர்வதேச பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் சிந்து, சீனாவின் வாங் டெய் மோதினர். அபாரமாக ஆடிய சிந்து 21-15, 21-17 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் உன்னாதி ஹூடா 21-16, 21-9 என அமெரிக்காவின் இஷிகாவை வீழ்த்தினார். மற்ற காலிறுதியில் இந்தியாவின் தஸ்னிம் மிர், ஸ்ரீயான்ஷி தோல்வியடைந்தனர்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் லக்சயா சென், மீராபா லுவாங் மைஸ்னம் மோதினர். இதில் லக்சயா சென் 21-8, 21-19 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.
மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி 7-21, 14-21 என ஜப்பானின் ஷோகோ ஒகாவாவிடம் தோல்வியடைந்தார்.
கலப்பு இரட்டையர் காலிறுதியில் இந்தியாவின் துருவ் கபிலா, தனிஷா கிராஸ்டோ ஜோடி வெற்றி பெற்றது. பெண்கள் இரட்டையரில் இந்தியாவின் திரிசா, காயத்ரி கோபிசந்த் ஜோடி வென்றது.