ADDED : டிச 06, 2024 10:34 PM

கவுகாத்தி: கவுகாத்தி பாட்மின்டன் அரையிறுதிக்கு இந்தியாவின் சதிஷ் குமார், மான்சி சிங், அன்மோல் கார்ப் முன்னேறினர்.
அசாமின் கவுகாத்தியில், 'சூப்பர் 100' அந்தஸ்து பெற்ற மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் சதிஷ் குமார் கருணாகரன், தாய்லாந்தின் சரண் ஜாம்ஸ்ரீ மோதினர். அபாரமாக ஆடிய சதிஷ் குமார் 21-19, 21-13 என்ற நேர் செட் கணக்கல் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
மற்ற காலிறுதியில் இந்தியாவின் தருண், ரவி, ஆயுஷ் ஷெட்டி தோல்வியடைந்தனர்.
பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் அன்மோல் கார்ப் 21-13, 22-24, 22-20 என தாய்லாந்தின் லாலின்ராத் சைவானை வீழ்த்தினார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் மான்சி சிங் 22-20, 21-18 என தாய்லாந்தின் கெட்க்லியெங்கை வீழ்த்தினார். இந்தியாவின் தன்வி சர்மா 15-21, 12-21 என சீனாவின் வு லுவோ யுவிடம் தோல்வியடைந்தார்.
கலப்பு இரட்டையர் காலிறுதியில் இந்தியாவின் துருவ் கபிலா, தனிஷா கிராஸ்டோ ஜோடி 21-16, 21-14 என சகநாட்டை சேர்ந்த சாத்விக் ரெட்டி, வைஷ்ணவி ஜோடியை வீழ்த்தியது.